மம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு


பிரதமர் மோடி சொந்த நாட்டில் நடைபெற்று வரும் காவிரி பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை

mahendran thagavalthalam

         நாடு நாடாக பறந்து சென்று கொண்டிருக்கும் பிரதமர் மோடி சொந்த நாட்டில் நடைபெற்று வரும் காவிரி பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன் பிரதமர் மீது குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் தமிழர் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட சி. மகேந்திரன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசு போது, நாடு நாடாக விமானத்தில் பறந்து செல்லும் பிரதமர் மோடி சொந்த நாட்டில் நடைபெற்று வரும் காவிரி பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.

       மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து வெறும் கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தால் தீர்வு கிடைக்காது என்றும் போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை ஏவியுள்ள தமிழக அரசுக்கு கண்டனத்தையும் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.


முதல்வரின் பார்வை செங்கோட்டையன் பக்கம் திரும்புமா


  கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க ஆட்சியின் அசைக்க முடியாத அதிகாரப்புள்ளியாக வலம் வந்த செங்கோட்டையன், அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

         அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நேரடி குட்-புக்கில் இடம் பெற்றிருந்தவர் செங்கோட்டையன். தேர்தல் பிரசாரத்திற்கு ஜெயலலிதா செல்லும் இடங்களில், முக்கிய பாயிண்டுகளில் செங்கோட்டையன் எந்த இடத்தில் நிற்கிறாரோ, அந்த இடத்தில்தான் ஜெயலலிதா பேசுவார். அந்தளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக வலம் வந்தார். எம்.ஜி.ஆரால் வளர்த்துவிடப்பட்டவரான செங்கோட்டையன், ஜா. - ஜெ. அணிகளாக அ.தி.மு.க பிரிந்தபோது, ஜெ. அணியில் இருந்தார். ஒரு கட்டத்தில், முத்துச்சாமி மீதான ஜெயலலிதா அதிருப்தியில் இருக்க செங்கோட்டையனை அமைச்சர் ஆக்கினார்.
Thagavalthalam

        முதல்வரின் வெறிபிடித்த பக்தனாகவே இருந்தார் செங்கோட்டையன். 1991 -96ல் செங்கோட்டையன் கொடிதான் பறந்தது. ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரப் பயணத்தை வடிவமைக்க வேண்டும் என்றால், செங்கோட்டையன்தான் சரியான சாய்ஸ் ஆக இருந்தார். 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, அவருக்குவேளாண்மைத் துறையை ஒதுக்கினார்.
     2011 சட்டமன்றத் தேர்தலில், பணத்தைப் பெற்றுக்கொண்டு தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுத்தார் என்றும், முதல்வர் பதவிக்கு அச்சாரம் போடுகிறார் என்றும் சசிகலாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வரிசைகட்டின. அவை தொடர்பாக, அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து விசாரணை நடத்தினார் ஜெயலலிதா.
       அப்போது, சசிகலா பற்றித் தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் ஜெயலலிதாவிடம் போட்டுடைத்தார், செங்கோட்டையன். அமைச்சரவையில் மற்றவர்களைவிட செங்கோட்டையனை அதிகம் நம்பும் ஜெயலலிதா, கார்டனைவிட்டு சசிகலாவை வெளியில் அனுப்பினார். அது முதலே, சசிகலாவுக்கும் செங்கோட்டையனுக்கும் மோதல் தொடங்கியது.
        கடந்த ஆட்சியின் தொடக்கத்திலேயே குடும்பத்தால் பிரச்னை ஏற்பட்டது. போயஸ்கார்டனை விட்டு வெளியேறிய சசிகலா மீண்டும் திரும்பி வந்துவிட்டார். அதையடுத்து, விசாரணையே இல்லாமல் செங்கோட்டையனிடம் இருந்த அத்தனைப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டன. இருப்பினும், கட்சி நிகழ்ச்சிகள், பொது விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்பதை அவர் தவிர்க்கவில்லை.

   2016 சட்டசபைத் தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிட செங்கோட்டையனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. வெற்றி பெற்றார் செங்கோட்டையன். 96ம் ஆண்டுக்குப் பிறகு பெரிதாக எந்தப் பதவியிலும் அவர் இல்லை. இந்தமுறை வேட்பாளராக அறிவித்தபோது, 'செலவுக்கு என்ன செய்வது?' என யோசித்துக் கொண்டிருந்தார். பாரம்பரிய சொத்துக்கள் இருந்தாலும், அத்தனையும் வீடு, நிலங்களாக உள்ளன. செலவு செய்வதற்கு பணமாக எதுவும் இல்லை.
     சட்டசபைத் தேர்தலின் போது அனைவரிடமும் பத்து லட்சம், இருபது லட்சம் என கடன் வாங்கித்தான் செலவு செய்தாராம். சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. அரசியலில் இருந்தால் தொகுதியின் தேவைகளையாவது பூர்த்தி செய்யவேண்டும். ஆனால், இவர் கேட்டு எந்த அமைச்சரும் கண்டுகொள்ளப்போவதில்லை. எனவே, அரசியலே வேண்டாம் என்று செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளாரம்.
 Thagavalthalam Image result for செங்கோட்டையன்


       ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக்காலத்தில், 'செங்கோட்டையன் வருகிறார்' என்றாலே கொங்கு மண்டல கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒருவித அலறல் இருக்கும். அந்தளவுக்கு பவர் பாலிடிக்ஸால் கோலோச்சிக் கொண்டிருந்தவர், இப்போது முதல்வரின் கண்பார்வைக்காக காத்துக் கிடக்கிறார் என்கின்றனர்.
        எட்டு முறை எம்.எல்.ஏ., ஐந்து முறை அமைச்சர் என இருந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், கொங்கு மண்டலத்தில் அதிகத் தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவின் அரசியல் அதிரடிகளைச் சமாளிக்க செங்கோட்டையன் போன்றவர்கள் தேவை என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர், ஆனால் ஜெயலலிதாவின் பார்வை செங்கோட்டையன் பக்கம் திரும்புமா  ?


தமிழகத்தில் விவசாய நிலப்பரப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் தாமோதரன் தெரிவித்துள்ளார்


பசுமைநாயகன் Pasumai4U

      தமிழகத்தில் விவசாய நிலப்பரப்பு குறைந்துவிட்டதாக வேளாண் துறை அமைச்சர் தாமோதரன் தெரிவித்துள்ளார். வேளாண் வளர்ச்சிக்கு உதவும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் மண்டல வேளாண்மை பெருவிழா, தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.
        இதில் பேசிய அமைச்சர் தாமேதரன், ரசாயன உரங்களை தேவைக்கு ஏற்பவும், தேவைக்கு அதிகமாகவும் இடுவதால் மண்வளம் கெடுகிறது என்றார். இதனால் ஏற்படும் மகசூல் இழப்பை தடுக்க ஆறு கோடி ரூபாய் நிதி மதிப்பீட்டில் மாநிலத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும், புவி விபரங்களின் அடிப்படையில் மண் வரைபடங்களை கணினி மூலமாக பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தாமோதரன் கூறினார்.
       தமிழகத்தில் விவசாய நிலப்பரப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், குறைந்த நிலப்பரப்பில் அதிக விவசாயம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் சிறுதானியங்களின் உற்பத்தி குறைந்துவிட்ட காரணத்தினால் இன்றுள்ள இளைய தலைமுறையினருக்கு நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் அமைச்சர் தாமோதரன் கூறினார்.

2 ஜி விவகாரத்தில் தி.மு.க செய்த தவறுக்கு காங்கிரசும் சேர்ந்தே அவமானப்பட்டது

www.thagavalthalam.com பசுமைநாயகன்

2ஜி விவகாரத்தில் தி.மு.க செய்த தவறுக்கு காங்கிரசும் சேர்ந்தே அவமானப்பட்டது" என்று சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, 2ஜி விவகாரத்தில் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோரை பலிகடா ஆக்கிவிட்டு தப்பித்துக் கொண்டார்கள் என காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியிருந்தார்.இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியபோது, 2 ஜி விவகாரத்தில் தி.மு.க செய்த தவறுக்கு காங்கிரசும் சேர்ந்தே அவமானப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.மேலும் 2ஜி ஏலத்தில் பிரதமர் சொல்லியும் தெரிந்தே ஆ.ராசா  தவறு செய்தார் என கூறினார்.